சித்தர்கள்

|

மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால்
உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ்,
இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி
என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை
முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல
அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள
எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி
பெறுபவரே சித்தர்.ஆசாபாசங்களில் உழலவைக்கும்
மும்மலத்தை வென்றவர்கள்.

சித்தத்தை சிவன்பால் உறைய வைத்து
சிவனோடு ஐக்கியமானவர்கள்.
ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே
தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை
வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே
வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும்
உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி
வருகின்ற பெரியோர்களே, மகான்களே சித்தர்கள்.

கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர்.
அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன.
பழனியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு
என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும்
பெற்றிருப்பவன் -ஆதலின் முருகனுக்குச் சித்தன்
என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த
அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம்
சித்துக்களாகக் குறிப்பிடும்.



 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB