|


தெரிந்தது கொஞ்சம்-தெரியாதது அதிகம்
தெரிந்ததை பகிர்ந்து கொண்டு-
தெரியாததை தெரிந்து கொள்ள ஆசை.
-அடியேன்.


கற்றது கையளவு
கல்லாதது உலகளவு.
உலாவியில் படித்தது கொஞ்சம்- இன்னும்
- படிக்க வேண்டுகிறது நெஞ்சம்.
எழுதினால் படிப்பேன்
படிப்பதை பகிர்வேன்
பகிர்ந்ததை * படிக்க வேண்டும்
படித்தபடி * போற்ற வேண்டும்
சித்தரருள் பெற வேண்டும்
ஈசன் என்றும் துணையிருப்பான்.

ஓம் நமச்சிவாய

( * -நீங்களும் )



பழைய புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தும்,
சிவசிந்தனையாளர்களின் சொற்பொழிவுகளைக்
கேட்டு அறிந்தும்,இணையத்தில் உலாவியதிலும்-
கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து-இந்த
ஞான பூமியில் வழங்கியுள்ளேன்.

அன்பர்கள் படித்து இன்புற்று-சித்தர் பாதங்களை போற்றி-
அவர்களின் ஜீவசமாதிகளை தொழுது-வாழ்வில் எல்லா
நலனும் பெற்று உய்ய விழைகிறேன்.

படித்து இன்புற்றால் வாழ்விலே இன்பம்
எந்நாளும் துன்பம் இல்லை.

மேலும் புதுவை சித்தர்களைப் பற்றி அதிக
செய்திகளை தந்து உதவினால்,அடுத்த இடுகையில்
நீக்கவோ,சேர்க்கவோ செய்து இன்னும் சிறப்பானதாக
செய்து-பல அன்பர்களும் பயன் பெற முயற்சிப்பேன்.

புதுவையிலிருந்து தோன்றிய,முதல் பதிப்பான
இம்முயற்சி வெற்றி பெற-புதுவை ஆத்ம ஞானிகளின்
அரிய தகவல்களை மேலும் மேலும் திரட்டி
வெளிகொணர -அன்பர்களும் தங்களால்
இயன்ற தகவல்களை தந்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஆத்மீக அன்பர்களே, தாங்கள் அறிந்த இன்ன பிற சித்தர்களின்
அரிய தகவல்களை இப்பளாக்கில் இணைத்து சிறப்பிக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.

சித்தர்களைப் பற்றி படித்துணர்வதின் மூலம்,அன்பர்கள்
தங்களுக்குள் இருக்கும் பேரமைதியை வெளிகொணர்ந்து
ஆனந்த அமைதியோடு பிரகாசிக்கவேண்டும்.

இறைவன் திருவடிகளை சதா நினைந்து இறையுணர்வு பெற்று
இறையருளின் மூலம் சச்சிதானந்தப் பெருநிலையை
இதை படிப்பதின் மூலம் பெற வேண்டும்.

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
-திருமந்திரம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ ஆன்ம நேய ஒருமை
பாட்டையும், ஆனந்த அமைதியையும் இப்பிரபஞ்சங்கள்
மூலம் பரவ அன்பர்கள் பணி செய்வார்கள் என்று
நம்புகிறோம்.

எல்லா உயிரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல்
யாமொன்றும் அறியேன் பராபரமே.

தகவல் கொடுத்து உதவி புரிந்த எல்லா நல் இதயங்களுக்கும்
நன்றி.
ஞானபூமியின் சித்தர்களின் சிறப்பை தொகுத்து
வழங்க-ஊக்கத்தையும் முயற்சியையும்,உற்சாகத்தையும்
அளித்து வரும்,அனைத்து சித்தர் பெருமக்களின்
பொற்பாதங்களுக்கு என் நன்றியையும்
வணக்கத்தையும் சமர்ப்பித்து கொள்கிறேன்.

அனைத்தையும் படைத்த இப்பிரபஞ்ச நாயகன் -
சர்வேஸ்வரனுக்கு
எம்மையே அர்ப்பணித்து மகிழ்வோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி


திருசிற்றம்பலம்




 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB